செய்திகள்

5 டாக்சி ஓட்டுநர்களை குடும்பத்தினரின் கண் முன்னால் கொலை செய்த ஐ.எஸ்.

Published On 2016-08-07 13:20 GMT   |   Update On 2016-08-07 13:20 GMT
ஈராக்கில் ஐ.எஸ். பிடியில் இருந்த பொதுமக்களை காப்பாற்றிய, ஐந்து கார் ஓட்டுநர்களை ஐ.எஸ் இயக்கத்தினர் கொலை செய்துள்ளனர்.
பாக்தாத்:

ஈராக்கில் தங்களின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பொதுமக்களை, பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்ல முயன்ற ஐந்து டாக்சி ஓட்டுநர்களை ஐ.எஸ் இயக்கம் கொலை செய்ததாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.  

ஐ.எஸ் இயக்கத்தினரால் கைது செய்யப்பட்ட அந்த ஐந்து கார் ஓட்டுநர்களும், ஈராக்கின் மேற்கு பகுதியில் உள்ள கேம் என்ற நகரில் வைத்து கொல்லப்பட்டுள்ளனர். தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் மக்கள் தப்பி செல்வதற்கு வேறு யாறும் உதவக்கூடாது என்பதற்காக, ஐந்து ஓட்டுநர்களும் கொலை செய்யப்படும் காட்சியை அவர்களின் குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் கட்டாயப்படுத்தி பார்க்க வைத்துள்ளனர்.

ஈராக்கின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிப்பது இல்லை.

Similar News