தமிழ்நாடு
முகநூலில் தமிழக அரசு குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக தாராபுரம் பா.ஜ.க. நிர்வாகி கைது
- நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் வினீத்தை கோவை சிறையில் அடைத்தனர்.
- பா.ஜ.க. நிர்வாகி திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் வினீத் (வயது 24).இவர் திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக உள்ளார். இவர் முகநூல் பக்கத்தில் தமிழக அரசு குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக தெரிகிறது. இதையறிந்த போலீசார் விசாரணை நடத்தி வினீத்தை கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் வினீத்தை கோவை சிறையில் அடைத்தனர். பா.ஜ.க. நிர்வாகி திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.