தமிழ்நாடு
அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்- தமிழக அரசு உத்தரவு
- தமிழக அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு, கண்பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
- ஓட்டுநர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சென்னை:
தமிழக அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு, கண்பரிசோதனை, காது பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
50 வயதுக்கு குறைவான ஓட்டுநர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 50 வயதுக்கு அதிகமான ஓட்டுநர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.