சசிகலா நாளை திண்டிவனம் தொகுதியில் சுற்றுப்பயணம்
- சசிகலா நாளை (5-ந்தேதி), 7-ந்தேதி, 8-ந்தேதி ஆகிய 3 நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- நாளை (5-ந்தேதி), சசிகலா விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
சென்னை:
சசிகலா தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்தார். அதன்படி அவர் தனது சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.
நேற்று அவர் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார்.
குமணன் சாவடியில் தனது பயணத்தை தொடங்கிய அவர் திருமழிசை, வெள்ளவேடு, பாக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். பொது மக்கள் மத்தியிலும் அவர் பேசினார்.
இந்த நிலையில் சசிகலா நாளை (5-ந்தேதி), 7-ந்தேதி, 8-ந்தேதி ஆகிய 3 நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை (5-ந்தேதி, சசிகலா விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இதற்காக அவர் நாளை மதியம் 12.30 மணிக்கு தி.நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறார். பின்னர் திண்டிவனம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.
வருகிற 7-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியிலும், 8-ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியிலும் சசிகலா சுற்றுப் பயணம் செய்து தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.