தமிழ்நாடு

மாமல்லபுரம் ஓட்டலில் இன்று இரவு விளையாட்டு வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருந்து அளிக்கிறார்

Published On 2022-07-27 07:50 GMT   |   Update On 2022-07-27 10:10 GMT
  • செஸ் விளையாட்டுக்காக 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மாமல்லபுரம் செல்கிறார்.

சென்னை:

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செஸ் விளையாட்டுக்காக 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அங்கு வருகை புரியும் வீரர்களுக்காக பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மாமல்லபுரம் செல்கிறார்.

அங்கு அழகுற நிறுவப்பட்டுள்ள கலை நயமிக்க நினைவு தூணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு ரேடிசன் ஓட்டலில் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்து கொடுக்கிறார்.

இதில் பங்கேற்குமாறு ஏராளமான வீரர்கள், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News