தமிழ்நாடு
null

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - அரசு அறிவுறுத்தல்

Published On 2023-12-30 10:45 GMT   |   Update On 2023-12-30 10:52 GMT
  • கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
  • குமரிக்கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை அடுத்து, தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 7000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News