தமிழ்நாடு

வானகரம் அருகே வாலிபரிடம் செல்போன் பறிப்பு

Published On 2023-08-29 08:56 GMT   |   Update On 2023-08-29 08:56 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென மணிபாலனின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டான்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வானகரம், ரத்னா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிபாலன் (22). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு சென்றுவிட்டு நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை வந்தார்.

பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக ஆண்டாள் நகர் வழியாக செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென மணிபாலனின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டான். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News