தமிழ்நாடு

கனமழை எதிரொலி: 5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து

Published On 2023-12-17 15:48 GMT   |   Update On 2023-12-17 15:48 GMT
  • நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
  • கனமழையால் நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை:

வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தொடர் மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை எதிரொலியாக நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News