செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் அதிகரித்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் முன்பைவிட அதிகமாக ஓடியது. மேலும் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.
மேலும் கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் அதிகரித்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் முன்பைவிட அதிகமாக ஓடியது. மேலும் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.
மேலும் கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.