செய்திகள்
கோப்புப்படம்

கடலில் மிதந்து வந்த ஆள்இல்லா குட்டி விமானம்- போலீஸ் விசாரணை

Published On 2020-12-05 08:19 GMT   |   Update On 2020-12-05 08:19 GMT
பழவேற்காடு அருகே கடலில் மிதந்து வந்த ஆள்இல்லா குட்டி விமானம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

பழவேற்காடு அருகே கோரைக்குப்பம் கிராமம் உள்ளது.

இன்று காலை 9 மணியளவில் ஒரு மர்ம பொருள் கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியது. அருகில் உள்ள மீனவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

அது சிறிய ரக குட்டி விமானம் என்று தெரிய வந்தது. சுமார் 5 அடி நீளமுள்ள அந்த பொருள் கரை ஒதுங்கிய தகவல் அறிந்ததும், ஏராளமானோர் அங்கு சென்று பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த குட்டி விமானத்தின் முன்பகுதி உடைந்து இருந்தது. உள்ளே பேட்டரி மற்றும் மின்சாதன பொருட்கள் காணப்பட்டன. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த குட்டி விமானத்தை பார்வையிட்டனர். அது தனியார் பறக்கவிட்ட ஆளில்லா ரிமோட் விமானமா? வானிலை ஆய்வுக்காக அரசுத்துறை சார்பில் அனுப்பப்பட்டதா? அல்லது உளவு விமானமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News