செய்திகள்
முழு ஊரடங்கு

குடவாசல் பேரூராட்சியில் மூன்று நாட்கள் முழு பொது முடக்கம்: பால், மருந்து கடைகளுக்கு மட்டுமே அனுமதி

Published On 2020-07-27 17:11 GMT   |   Update On 2020-07-27 17:11 GMT
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குடவாசல் பேரூராட்சியில் நாளையில் இருந்து ஜூலை 30-ந்தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி பகுதியில் அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான நகராட்சியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நாளை முதல் ஜூலை 30-ந்தேதி வரை மூன்று நாட்கள் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று திருவாரூர் கலெக்கடர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் குடவால் பேரூராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், பெட்ரோல் பங்க்குகள் ஆகிய அனைத்தும் முழு ஊரடங்கினை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News