செய்திகள்

இந்து கோவில் சொத்துக்களை மீட்க கோரி எச்.ராஜா உண்ணாவிரதம்

Published On 2018-09-02 10:48 GMT   |   Update On 2018-09-02 10:48 GMT
தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களின் சொத்துக்களை மீட்க கோரி எச்.ராஜா ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகிறார். #BJP #HRaja

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களின் சொத்துக்களை மீட்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை அமல்படுத்த கோரி பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் ஒருநாள் அடையாள உண்ணா விரத போராட்டம் இன்று வள்ளுவர்கோட்டத்தில் நடந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்து கோவில்களின் சொத்துக்களை மீட்க வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன், எஸ்.கே.கார் வேந்தன், அர்ஜுன் சம்பத், டி.ஆர். ரமேஷ் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News