செய்திகள்

குஷ்பு வெளிநாடு செல்ல ஐகோர்ட்டு அனுமதி

Published On 2017-04-27 05:08 GMT   |   Update On 2017-04-27 05:08 GMT
வெளிநாடு செல்ல அனுமதிக்க கோரி குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
மதுரை:

நடிகை குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது ஆண்டிப்பட்டி பகுதியில் தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது.



ஆனால் இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நான் வெளிநாடு செல்லும் போது எந்த நாட்டுக்கு செல்கிறேன், எங்கு தங்குகிறேன் என்பது உள்பட முழு விவரத்தை மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் நான் குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா செல்கிறேன். எனவே நான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டுகிறேன்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் வெளிநாடு செல்ல நடிகை குஷ்புவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Similar News