செய்திகள்
நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான சேலம் வீரர்: உருக்கமான தகவல்கள்
சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பலியான சேலம் வீரரின் உருக்கமான தகவல்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஆத்தூர்:
சத்தீஷ்கர் மாநிலத்தில் 4 தமிழர்கள் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 25 பேரை நக்சலைட்டுகள் சுட்டுக் கொன்றனர்.
இதில் 4 பேர் தமிழர்கள். அவர்களில் ஒருவர் திருமுருகன் (வயது 35) ஆவார். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வீரகனூரில் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி என்பவரின் மகன்.
சுட்டுக் கொல்லப்பட்ட திருமுருகனுக்கு செல்வி (30) என்ற மனைவியும், விரஞ்சியா (11), பிரியதர்ஷினி (10) என்ற மகள்களும், ஸ்ரீகரன்(8) என்ற மகனும் உள்ளனர்.
இதில் விரஞ்சியா 6-ம் வகுப்பும், பிரியதர்ஷினி 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.தற்போது திருமுருகன் குடும்பத்தினர் கோவையில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு திருமுருகன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமுருகன் இறந்த தகவலை அறிந்த நல்லூர் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் 4 தமிழர்கள் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 25 பேரை நக்சலைட்டுகள் சுட்டுக் கொன்றனர்.
இதில் 4 பேர் தமிழர்கள். அவர்களில் ஒருவர் திருமுருகன் (வயது 35) ஆவார். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வீரகனூரில் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி என்பவரின் மகன்.
சுட்டுக் கொல்லப்பட்ட திருமுருகனுக்கு செல்வி (30) என்ற மனைவியும், விரஞ்சியா (11), பிரியதர்ஷினி (10) என்ற மகள்களும், ஸ்ரீகரன்(8) என்ற மகனும் உள்ளனர்.
இதில் விரஞ்சியா 6-ம் வகுப்பும், பிரியதர்ஷினி 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.தற்போது திருமுருகன் குடும்பத்தினர் கோவையில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு திருமுருகன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமுருகன் இறந்த தகவலை அறிந்த நல்லூர் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.