செய்திகள்

கிருஷ்ணகிரியில் அதிக பாரம் ஏற்றி விபத்துக்களை ஏற்படுத்தும் லாரிகள்

Published On 2017-04-12 17:16 GMT   |   Update On 2017-04-12 17:16 GMT
கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் நேற்று அதிக பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வழியாக சென்னை, புதுச்சேரி, சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா, கர்நாடகா ஆகிய 2 மாநில எல்லைப்பகுதியில் உள்ளது. இதனால் இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் செல்கின்றன. இதில் பல லாரிகள் அதிக அளவில் சரக்குகளை ஏற்றி செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.

கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் நேற்று அதிக பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதே போல அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட லாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News