செய்திகள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு தாமதமானதால் அ.தி.மு.க பிரமுகர் தர்ணா
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு தாமதமானதால் அ.தி.மு.க பிரமுகர் தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
களக்காடு தேவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முண்டசாமி(வயது35). அதிமுக பிரமுகரான இவர் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் தேவநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முண்டசாமி தனது நிலத்தை பார்ப்பதற்காக தேவநல்லூர் பகுதிக்கு சென்றார்.
பின்பு அவர் களக்காட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் நெல்லைக்கு புறப்பட்டார். மோட்டார்சைக்கிள் சிங்கிகுளம் பகுதியில் வந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. திடீரென அவர்கள் கம்பு மற்றும் ஆயுதங்களால் முண்டசாமியை சரமாரியாக தாக்கினர். இதில் முண்டசாமி காயம் அடைந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
தாக்குதலில் காயம் அடைந்த முண்டசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரியில் முண்டசாமியை டாக்டர்கள் பரிசோதிக்காமல் சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த முண்டசாமி திடீரென்று ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தரையில் படுத்து உருண்டு தர்ணா செய்தார். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் பேச்சு நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. ஐகிரவுண்டு போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர். இதனிடையே தான் தாக்கப்பட்டது தொடர்பாக முண்டசாமி அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் உள்பட 4 பேர் மீது புகார் செய்தார். இதுபற்றி களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களக்காடு தேவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முண்டசாமி(வயது35). அதிமுக பிரமுகரான இவர் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் தேவநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முண்டசாமி தனது நிலத்தை பார்ப்பதற்காக தேவநல்லூர் பகுதிக்கு சென்றார்.
பின்பு அவர் களக்காட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் நெல்லைக்கு புறப்பட்டார். மோட்டார்சைக்கிள் சிங்கிகுளம் பகுதியில் வந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. திடீரென அவர்கள் கம்பு மற்றும் ஆயுதங்களால் முண்டசாமியை சரமாரியாக தாக்கினர். இதில் முண்டசாமி காயம் அடைந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
தாக்குதலில் காயம் அடைந்த முண்டசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரியில் முண்டசாமியை டாக்டர்கள் பரிசோதிக்காமல் சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த முண்டசாமி திடீரென்று ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தரையில் படுத்து உருண்டு தர்ணா செய்தார். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் பேச்சு நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. ஐகிரவுண்டு போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர். இதனிடையே தான் தாக்கப்பட்டது தொடர்பாக முண்டசாமி அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் உள்பட 4 பேர் மீது புகார் செய்தார். இதுபற்றி களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.