செய்திகள்

மரக்காணம் அருகே இன்று பஸ் கவிழ்ந்து 26 பயணிகள் படுகாயம்

Published On 2017-02-27 10:24 GMT   |   Update On 2017-02-27 10:24 GMT
மரக்காணம் அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

மரக்காணம்:

சென்னையில் இருந்து புதுவைக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமார் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். 26 பயணிகள் பயணம் செய்தனர்.

பஸ் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் பூமீஸ்வரர் கோவில் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் இடிபாட்டிற்குள் சிக்கி 26 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Similar News