செய்திகள்
தக்கலையில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்: அழகி உள்பட 2 பேர் கைது
தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் செய்த அழகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தக்கலை:
தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சிலர் ரகசிய தகவல் கொடுத்தனர். அதன்படி நேற்று மாலை தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெத்தினமணி மற்றும் மேரி ஜெமிதா ஆகியோர் போலீசாருடன் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டுக்குள் ஒரு வாலிபரும், பெண்ணும் அரைகுறை ஆடையுடன் இருப்பதை போலீசார் கண்டனர். அவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அந்த பெண், வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 3,4,5 மற்றும் 7 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
விபசாரம் நடந்த வீட்டில் மேலும் 3 பெண்கள் இருந்தனர். அவர்கள் சிறுதொழில் செய்ய அங்கு வந்ததாக தெரிவித்தனர். அவர்களை போலீசார் சுங்கான்கடையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது பற்றி போலீசார் கூறும்போது, நகரில் இதுபோல விபசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபடுவார்கள் என்றனர்.
தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சிலர் ரகசிய தகவல் கொடுத்தனர். அதன்படி நேற்று மாலை தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெத்தினமணி மற்றும் மேரி ஜெமிதா ஆகியோர் போலீசாருடன் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டுக்குள் ஒரு வாலிபரும், பெண்ணும் அரைகுறை ஆடையுடன் இருப்பதை போலீசார் கண்டனர். அவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அந்த பெண், வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 3,4,5 மற்றும் 7 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
விபசாரம் நடந்த வீட்டில் மேலும் 3 பெண்கள் இருந்தனர். அவர்கள் சிறுதொழில் செய்ய அங்கு வந்ததாக தெரிவித்தனர். அவர்களை போலீசார் சுங்கான்கடையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது பற்றி போலீசார் கூறும்போது, நகரில் இதுபோல விபசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபடுவார்கள் என்றனர்.