செய்திகள்
முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு: ஜனநாயக படுகொலை- நாம் தமிழர் சீமான் பேட்டி
முதல்வர் யார் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். ஆகவே இதை ஜனநாயக படுகொலையாக கருதுகிறேன் என நாம் தமிழர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பொன்னேரி:
பொன்னேரியில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பதவியேற்ற பிறகும் அடைத்து வைத்துள்ளனர். இதிலிருந்து வெளியே ஓடிவிடுவார்கள், மாயமாகி விடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. உடனடியாக ஜனநாயக முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் தேர்வு செய்த அரசாக உள்ளது. முதல்வர் யார் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். ஆகவே இதை ஜனநாயக படுகொலையாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.