செய்திகள்

துறையூர் அருகே தாய்-மகள் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2016-12-08 06:07 GMT   |   Update On 2016-12-08 06:07 GMT
துறையூர் அருகே தாய், மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூரை அருகே உள்ள கீரம்பூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (60). இவர்களுக்கு காயத்ரி (27) என்ற மகள் உள்ளார்.

காயத்ரிக்கு இன்னும் திருமணமாகவில்லை. தந்தை செல்வராஜ் பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும் ஜாதகம் சரிவராததால் திருமணம் தள்ளிப்போனது.

இந்த நிலையில் செல்வராஜ் தனது மகளுக்கு ஜாதகம் பார்பதற்காக வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்காததால் அதிர்ச்சியடைந்த செல்வராஜ் வீட்டின் பின்பக்கம் உள்ள கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அங்கு கிருஷ்ணம்மாளும், காயத்திரியும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணம்மாள், காயத்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

காய்த்திரியின் ஆடையில் கடிதம் ஒன்று இருப்பதை போலீசார் பார்த்தனர். அந்த கடிதத்தில் காயத்திரி, (தான்) யாரையும் காதலிக்கவில்லை. திருமணமாகவில்லை என்ற வருத்தமும் இல்லை. மனஅழுத்தம் காரணமாக நான் தற்கொலை செய்து கொண்டேன். எனது சாவிற்கு யாரும் காரணமில்லை.

இதனால் யார் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயத்திரிக்கு 27 வயது ஆகியும் திருமணமாகவில்லை என குடும் பத்தினர் சோகத்தில் இருந்து வந்ததாகவும் இது குறித்து கிருஷ்ணம்மாள் பலரிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் அக்கம் பக்கத்தினர் கூறினர்.

தாய், மகள் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Similar News