செய்திகள்

புதுவை அருகே கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய வாலிபர்

Published On 2016-12-02 09:12 GMT   |   Update On 2016-12-02 09:12 GMT
புதுவை அருகே கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது கடலூர் சிறையில் அடைத்தனர்.

காலாப்பட்டு:

புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான நாவற்குளத்தை சேர்ந்த வாலிபர் சந்திரமோகன்.

அதே பகுதியில் கணவரை பிரிந்த இளம்பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கும், சந்திர மோகனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் காதலியின் 12 வயது மகள் மீதும் சந்திரமோகனுக்கு மோகம் ஏற்பட்டது. தாயின் உடந்தையுடன் அந்த சிறுமியிடமும் சந்திரமோகன் பல முறை தகாத முறையில் நடந்து கொண்டார்.

இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். கர்ப்பமானது தெரியாமல் அந்த சிறுமி வீட்டில் இருந்து வந்தார். திடீரென வயிறு வலிக்கவே அந்த சிறுமி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற சென்றார். அப்போதுதான் 3 மாத கர்ப்பமாக இருந்தது அந்த சிறுமிக்கு தெரியவந்தது.

இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி விசாரணை நடத்தினார். அப்போது சந்திரமோகன் அடிக்கடி சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சந்திரமோகனையும், இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அந்த சிறுமி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News