செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிந்தது

Published On 2016-10-03 04:55 GMT   |   Update On 2016-10-03 04:55 GMT
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது.
மேட்டூர்:

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது.

நேற்று காலையில் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 831 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து இன்று மேலும், சரிந்து விநாடிக்கு 796 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நீர்வரத்தை விட, திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் 1 அடி வீதம் குறைந்து கொண்டு வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 77.49 அடியாக இருந்தது. பின்னர் 1 அடி சரிந்து இன்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 76.46 அடியாக உள்ளது.

Similar News