செய்திகள்

மதுரையில் சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் பட்டிமன்றம்: இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கிவைத்தார்

Published On 2016-09-27 22:54 GMT   |   Update On 2016-09-27 22:54 GMT
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 112-வது பிறந்தநாள் விழா நேற்று மாலைமுரசு தொலைக்காட்சி சார்பில் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
மதுரை:

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 112-வது பிறந்தநாள் விழா நேற்று மாலைமுரசு தொலைக்காட்சி சார்பில் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்றது.

“திரைப்பட பாடல்களால் மகிழ்ச்சியா? எழுச்சியா?” என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கிவைத்தார். பட்டிமன்றத்தில் மகிழ்ச்சியா என்ற அணியில் கவிஞர்கள் லட்சுமணப்பெருமாள், மலர்விழி ஆகியோரும், எழுச்சியா என்ற அணியில் நாஞ்சில்செல்லக்கண்ணன், பேராசிரியை விஜயசுந்தரி ஆகியோரும் பங்கேற்று பேசினார்கள். நடுவராக கு.ஞானசம்பந்தன் பங்கேற்று, “திரைப்பட பாடல்களால் எழுச்சியே” என்று தீர்ப்பு வழங்கினார்.

Similar News