செய்திகள்

ஊட்டி மலை ரெயில் பழுது: நடுவழியில் நின்றதால் சுற்றுலா பயணிகள் தவிப்பு

Published On 2016-07-05 05:19 GMT   |   Update On 2016-07-05 05:19 GMT
ஊட்டி மலை ரெயில் திடீர் பழுதாகி நடுவழியில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நூற்றாண்டு பழமையான மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இன்று காலை வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து 7.10 மணிக்கு பயணிகளுடன் குன்னூருக்கு மலைரெயில் புறப்பட்டது. குதூகலமாக சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

கல்லார் ரெயில் நிலையம் அருகே வந்தபோது ரெயில் சக்கரத்தை இயக்கும் ராடுகள் முறிந்தது. இதனால் கல்லூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரெயிலில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1½ மணி நேரத்துக்கு பின்னர் ரெயிலில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டது. 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 9.45 மணிக்கு புறப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

Similar News