செய்திகள்

ஆல் இங்கிலாந்து ஓபன்: காலிறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வி

Published On 2019-03-08 13:53 GMT   |   Update On 2019-03-08 13:53 GMT
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால் தைவான் வீராங்கனையிடம் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். #Saina
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால் தைவானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை தாய் சூ யிங்-ஐ எதிர்கொண்டார்.



இதில் சாய்னா நேவால் 15-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். சாய்னாவும், தாய் சூ யிங்கும் 20 முறை நேருக்குநேர் மோதியுள்ளனர். இதில் சாய்னா ஐந்து முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 2015-ல் இருந்து சாய்னாவிற்கு எதிராக தாய் சூ யிங் தோல்வியடைந்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News