செய்திகள்

ஆசிய விளையாட்டிற்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் ககன் நரங்கிற்கு இடமில்லை.

Published On 2018-06-29 11:38 GMT   |   Update On 2018-06-29 11:38 GMT
இந்தோனேசியாவில் நடைபெற இருக்கும் ஆசிய போட்டிக்கான இந்தியா துப்பாக்கி சுடுதல் அணியில் ககன் நரங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. #AsianGames2018
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 18-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை தேசிய ரைபிள் அசோசியேசன் வெளியிட்டது. இதில் ககன் நரங்கிற்கு இடம் கிடைக்கவில்லை.



ஆண்களுக்கான ஏர் ரைபிள் அணியில் ரவி குமார், தீப் குமார் ஆகியோர் இணைந்து செயல்பட இருக்கிறார்கள். 3 பொஷிசன் அணியில் சஞ்ஜீவ் ராஜ்புட், அகில் ஷெயோரன் இடம்பிடித்துள்ளனர். ரைபிள் கலப்பு அணியில் ரவி குமார், அபுர்வி சண்டேலா இடம்பிடித்துள்ளனர்.
Tags:    

Similar News