செய்திகள்

இங்கிலாந்தில் தொடரை வெல்வது வாழ்நாள் நினைவாக இருக்கும் - முகமது அமிர்

Published On 2018-05-31 13:14 GMT   |   Update On 2018-05-31 13:14 GMT
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லது என்னுடைய வாழ்நாள் நினைவாக இருக்கும் என அமிர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2-வது மற்றும் கடைசி டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நாளை தொடங்குகிறது. பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்தில் பாகிஸ்தான் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்றால் என்னுடைய வாழ்நாள் நினைவாக இருக்கும் என முகமது அமிர் கூறியுள்ளார்.



இதுகுறித்து முகமது அமதிர் கூறுகையில் ‘‘நாளை தொடங்கும் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால், இதை சிறந்த நினைவாக கொண்டாட முடியும். இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணில் வைத்து வீழ்த்தியது மிகப் பெரிய சாதனை’’ என்றார்.
Tags:    

Similar News