செய்திகள்

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: சேப்பாக் அணிக்கெதிராக தூத்துக்குடி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

Published On 2017-08-20 13:46 GMT   |   Update On 2017-08-20 13:46 GMT
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டி.என்.பி.எல். இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிராக தூத்துக்குடி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் லீக் சுற்று, குவாலிபையர்-1, எலிமினேட்டர், குவாலிபையர்-2 சுற்றுகள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ஆல்பர்ட் டூடி பேட்ரியாட்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இன்று சென்னை சேப்பாக் மைதானத்தில் இறுதிப் போட்டி சரியாக இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆல்பர்ட் டூடி பேட்ரியாட்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஆல்பர்ட் டூடி பேட்ரியாட்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. வாஷிங்டன் சுந்தர், 2. கவுசிக் காந்தி, 3. தினேஷ் கார்த்திக், 4. அபிநவ் முகுந்த், 5. சுப்ரமணியன் ஆனந்த், 6. எஸ்.பி. நாதன், 7. ஆகாஷ் சும்ரா, 8. ஆஷிக் ஸ்ரீனிவாஸ், 9. எம். கணேஷ் மூர்த்தி, 10. அதிசயராஜ் டேவிட்சன், 11. லட்சுமணன்.

சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கோபிநாத், 2. தலைவன் சற்குணம், 3. எஸ். கார்த்திக், 4. ராஜகோபால் சதீஷ், 5. சசிதேவ், 6. அந்தோணி தாஸ், 7. சத்திய மூர்த்தி சரணவன், 8. யோ மகேஷ், 9. சாய் கிஷோர், 10. அலேக்ஸாண்டர், 11. அருண் குமார்.
Tags:    

Similar News