செய்திகள்
ஊக்கமருந்து பயன்படுத்தியதாக இத்தாலி டென்னிஸ் வீராங்கனைக்கு இரண்டு மாதம் தடை
மார்பக புற்றுநோய்க்காக சாப்பிட்ட மருந்து தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து என்பதால் இத்தாலி டென்னிஸ் வீராங்கனைக்கு இரண்டு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த 29 வயதான டென்னிஸ் வீராங்கனை சாரா எராணி மார்பக புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது லெட்ரோஸோல் என்ற மருந்தை பயன்படுத்தியுள்ளார். இது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்படுத்த தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பட்டியலில் உள்ளது.
இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சிறுநீரக பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. இதனால் உலக டென்னிஸ் பெடரேசன் அவருக்கு இரண்டு மாதம் தடைவிதித்துள்ளது.
சாரா 2012-ம் ஆண்டு பிரான்ஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதே ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதிக்கும், அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கும் முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது லெட்ரோஸோல் என்ற மருந்தை பயன்படுத்தியுள்ளார். இது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்படுத்த தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பட்டியலில் உள்ளது.
இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சிறுநீரக பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. இதனால் உலக டென்னிஸ் பெடரேசன் அவருக்கு இரண்டு மாதம் தடைவிதித்துள்ளது.
சாரா 2012-ம் ஆண்டு பிரான்ஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதே ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதிக்கும், அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கும் முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.