செய்திகள்
டெல்லியை வீழ்த்தியது ஐதராபாத்: வில்லியம்சன் - தவான் ஜோடிக்கு வார்னர் பாராட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக வில்லியம்சன் - தவான் ஜோடி அற்புதமாக விளையாடியதாக வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் :
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை தோற்கடித்தது. இதில் கனே வில்லியம்சன் (89 ரன்), ஷிகர் தவான் (70 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் ஐதராபாத் அணி நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களும், சஞ்சு சாம்சன் 42 ரன்களும் எடுத்தனர்.
4-வது வெற்றிக்கு பிறகு ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், ‘எங்களது வீரர்களிடம் இருந்து மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் முதல் முறையாக களம் காணும் வாய்ப்பை பெற்ற வில்லியம்சன் அற்புதமாக விளையாடினார். அவரும், ஷிகர் தவானும் எங்களுக்கு நல்ல அடித்தளம் உருவாக்கி தந்தனர். கைவசம் விக்கெட்டுகளை தக்க வைத்துக் கொண்டு ஆட வேண்டும் என்று விரும்பினோம். அதை தவானும், வில்லியம்சனும் கச்சிதமாக செய்து காட்டினர்’ என்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை தோற்கடித்தது. இதில் கனே வில்லியம்சன் (89 ரன்), ஷிகர் தவான் (70 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் ஐதராபாத் அணி நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களும், சஞ்சு சாம்சன் 42 ரன்களும் எடுத்தனர்.
4-வது வெற்றிக்கு பிறகு ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், ‘எங்களது வீரர்களிடம் இருந்து மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் முதல் முறையாக களம் காணும் வாய்ப்பை பெற்ற வில்லியம்சன் அற்புதமாக விளையாடினார். அவரும், ஷிகர் தவானும் எங்களுக்கு நல்ல அடித்தளம் உருவாக்கி தந்தனர். கைவசம் விக்கெட்டுகளை தக்க வைத்துக் கொண்டு ஆட வேண்டும் என்று விரும்பினோம். அதை தவானும், வில்லியம்சனும் கச்சிதமாக செய்து காட்டினர்’ என்றார்.