செய்திகள்

மாநில பெண்கள் செஸ் போட்டி திருவாரூரில் 23-ந்தேதி நடக்கிறது

Published On 2017-04-20 03:25 GMT   |   Update On 2017-04-20 03:25 GMT
திருவாரூர் மாவட்ட செஸ் சர்க்கிள் சார்பில் மாநில பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்போட்டி அங்குள்ள திருமதி ராசம்மாள் திருமண மண்டபத்தில் வருகிற 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை :

திருவாரூர் மாவட்ட செஸ் சர்க்கிள் சார்பில் மாநில பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்போட்டி அங்குள்ள திருமதி ராசம்மாள் திருமண மண்டபத்தில் வருகிற 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.

ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகைக்கான இந்த போட்டி 9 சுற்றுகளை கொண்டதாகும். தமிழ்நாடு செஸ் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News