செய்திகள்
அரை சதம் அடித்ததும் ரவீந்திர ஜடேஜா பேட்டை உயர்த்துகிறார்.

டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவது திருப்தி: ரவீந்திர ஜடேஜா

Published On 2017-03-28 03:41 GMT   |   Update On 2017-03-28 03:41 GMT
டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் எனது தன்னம்பிக்கையும் தானாக அதிகரித்துள்ளது என்று இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தரம்சாலா :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பாதையில் பயணிக்கிறது. வெற்றிக்கு இன்னும் 87 ரன்களே தேவைப்படுகிறது.

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நேற்று அளித்த பேட்டியில், ‘கடந்த காலங்களில் நான் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தேன். இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியிலும் நன்றாக செயல்படுவது மகிழ்ச்சியை கொடுப்பதுடன், திருப்தியையும் அளிக்கிறது.

டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் எனது தன்னம்பிக்கையும் தானாக அதிகரித்துள்ளது. இன்று (நேற்று) காலையில் சூழ்நிலை கடினமாக இருந்த நிலையிலும் நிலைத்து நின்று ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல் இன்னிங்சில் நமது அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது மிகவும் முக்கியமானதாகும். இதன் மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நமது பந்து வீச்சாளர்கள் நெருக்கடி இல்லாமல் பந்து வீச முடிந்தது எனலாம்’ என்று தெரிவித்தார்.

Similar News