செய்திகள்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அங்கூர் மிட்டல் தங்க பதக்கம் வென்றார்

Published On 2017-03-23 10:05 GMT   |   Update On 2017-03-23 10:05 GMT
மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அங்கூர் மிட்டல் உலக சாதனையுடன் தங்க பதக்கம் வென்றார்.
மெக்சிகோவின் அகாபுல்கோவில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டபுள் ட்ரப் போட்டியில் இந்தியாவின் அங்கூர் மிட்டல் தங்க பதக்கம் வென்று அசத்தினார்.

6 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில் 80 புள்ளிகளுக்கு 75 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் வில்லெட் வெள்ளி பதக்கமும், சீனாவி யிங் வெண்கல பதக்கமும் வென்றார்.



சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் வில்லெட் தங்கமும், அங்கூர் வெள்ளி பதக்கமும் வென்றிருந்தனர். தற்போது அங்கூர் தங்க பதக்கமும் வென்றதுடன், 75 புள்ளிளுடன் உலக சாதனையும் படைத்து அசத்தியுள்ளார்.

தகுதிச் சுற்றில் 150-க்கு 138 புள்ளிகள் பெற்று 2--வது இடம் பிடித்திருந்தார்.

Similar News