செய்திகள்
இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் நிகோலாய் ஆடம் விலகல்
இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் நிகோலாய் ஆடம் இந்திய கால்பந்து சம்மேளனத்துடன் கலந்து ஆலோசித்து பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.
17 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணியை தயார் செய்யும் வகையில் ஜெர்மனியை சேர்ந்த நிகோலாய் ஆடம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
உலக போட்டிக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துடன் கலந்து ஆலோசித்து இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.
வீரர்களை அடித்ததாக எழுந்த புகாரின் காரணமாக நிகோலாய் ஆடம் விலகல் முடிவை எடுத்ததாக தெரிகிறது. விரைவில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று அகில இந்திய கால்பந்து சம்மேளன செயலாளர் குஷால் தாஸ் தெரிவித்துள்ளார்.
உலக போட்டிக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துடன் கலந்து ஆலோசித்து இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.
வீரர்களை அடித்ததாக எழுந்த புகாரின் காரணமாக நிகோலாய் ஆடம் விலகல் முடிவை எடுத்ததாக தெரிகிறது. விரைவில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று அகில இந்திய கால்பந்து சம்மேளன செயலாளர் குஷால் தாஸ் தெரிவித்துள்ளார்.