செய்திகள்

ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி நாளை தென் கொரியாவுடன் மோதல்

Published On 2016-10-28 08:58 GMT   |   Update On 2016-10-28 08:58 GMT
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் நாளை தென் கொரியாவுடன் மோதுகிறது

இந்திய வீரர் சுரேந்தர் குமார் 2 ஆட்டத்தில் சஸ்பெண்ட்

4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி அரை இறுதியில் நாளை தென் கொரியாவுடன் மோதுகிறது. இந்த நிலையில் இந்திய வீரர் சுரேந்தர் குமார் 2 ஆட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அவர் எதிரணி வீரர் மீது ஆக்கி மட்டையால் இடித்ததால் விசாரணைக்கு பின்னர் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News