செய்திகள்

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி சாம்பியன்

Published On 2016-09-24 10:03 GMT   |   Update On 2016-09-24 10:03 GMT
பான் பசிபிக் ஓபன் டென்னிஸில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியாக ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பான் பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி, சீனாவின் சென் லியாங்- ஜாவோ ஹூயாங் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

சானியா ஜோடியின் ஆட்டத்திற்கு சீன ஜோடியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் சானியா ஜோடி 6-1, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் உடன் ஜோடி சேர்ந்து நீண்ட காலமாக விளையாடி வந்தார். இந்த ஜோடி உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனைப் படைத்தது.

அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் தொடருக்குப்பின் இந்த ஜோடி பிரிந்தது. சானியா செக் குடியரசு நாட்டின் பார்போரா ஸ்டிரிகோவாவுடன் ஜோடி சேர்ந்தார். செக் குடியரசு வீராங்கனையுடன் ஜோடி சேர்ந்து சானியா பெறும் 2-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

Similar News