செய்திகள்

தற்போதைய டெஸ்ட் அணி 8-10 வருடங்கள் விளையாடி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும்- சச்சின்

Published On 2016-09-22 06:59 GMT   |   Update On 2016-09-22 08:30 GMT
தற்போதைய இந்திய அணி இன்னும் 8 முதல் 10 வருடங்கள் இணைந்து விளையாடி உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் என்று சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்ட் இந்தியாவின் 500-வது டெஸ்ட் ஆகும். இதனால் முன்னாள் கேப்டன்கள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் சச்சின் தெண்டுல்கரும் கலந்து கொண்டார். இதுவரை இந்தியா விளையாடியதில் 40 சதவித போட்டிகளில் சச்சின் கலந்து கொண்டார். அதாவது 500-ல் 200 டெஸ்டில் அவர் இடம்பிடித்துள்ளார்.

கான்பூரில் போட்டியை ரசித்து பார்த்த சச்சின் தற்போதைய இந்திய அணி குறித்து கூறுகையில் ‘‘தற்போதைய இந்திய அணி அற்புதமான கலவையை பெற்றுள்ளது. இதன் சிறந்த விஷயம் என்னவென்றால் எல்லா வீரர்களும் இளைஞர்களாக இருப்பதுதான். இந்த அணி சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் இணைந்து விளையாடும் என்று நினைக்கிறேன். அப்படி விளையாடி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும்’’ என்றார்.

Similar News