செய்திகள்

பிரேசில் கால்பந்து வீரர் சிவமொக்காவுக்கு வருகை

Published On 2016-07-30 03:10 GMT   |   Update On 2016-07-30 03:10 GMT
விளையாட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் அடோனியஸ் பொன்சே கலந்துகொண்டார்.
சிவமொக்கா:

சிவமொக்காவில் நேற்று விளையாட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் அடோனியஸ் பொன்சே கலந்துகொண்டார்.

சிவமொக்கா தனியார் நிறுவனம் சார்பில் கால்பந்து போட்டி நடந்தது. அதில் அவர் கலந்துகொண்டு, விளையாட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவி டி.சன்னன்னவரும் கலந்துகொண்டார். பின்னர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடந்த மோட்டார் சைக்கிள் பேரணியிலும் அடோனியஸ் பொன்சே கலந்துகொண்டார்.

Similar News