இந்தியா

ஆன்லைன் ரம்மியில் ரூ.3 லட்சத்தை இழந்தததால் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்

Published On 2024-01-01 08:30 GMT   |   Update On 2024-01-01 08:30 GMT
  • ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
  • போலீசார் விசாரணை நடதி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு பலரும் அடிமையாகி இருக்கின்றனர். இதன் காணமாக பலர் கடன் வாங்கிக்கூட ஆன்லைன் ரம்மி விளையாடுகிறார்கள். இவ்வாறு விளையாடுபவர்கள் பலர் ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கான பணத்தை இழப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்படி பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறுகிறது. இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழக சட்ட சபையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தடை சட்டம் இயற்றப்பட்டது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஆன்லைன் ரம்மியில் ரூ.3 லட்சத்தை இழந்த வாலிபர் ஒருவர், அந்த பணத்தை திருப்புவதற்காக திருட்டில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம கோட்டயம் பாளை பரங்கனம் பகுதியை சேர்ந்த அமல் அகஸ்டின் என்ற வாலிபர் ரம்மி விளையாட கடனுக்கு பணம் வாங்கியிருக்கிறார்.

ரம்மி விளையாட்டில் அவர் 3 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். வாங்கிய இடத்தில் பணத்தை திருப்பி கொடுக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு அமல் அகஸ்டின் தள்ளப்பட்டார். இதனால் பணத்துக்கு என்ன செய்வதென்று யோசித்த அவர், திருட்டில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

அதன்படி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட அமல் அகஸ்டின் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அவருக்கு எந்தெந்த திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கிறது? என்று போலீசார் விசாரணை நடதி வருகின்றனர்.

Tags:    

Similar News