இந்தியா
விவசாயத்தை வலுப்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது- வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் பேச்சு
டிஜிட்டல் வேளாண்மை வணிகத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக உயர் தொழில்நுட்ப ஆன்லைன் இணைய தளங்களை மத்திய வேளாண் மந்திரி தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூச்சிக்கொல்லி மருந்து கணினி மயமாக்கப்பட்ட பதிவு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பரவலாக்குதலை தடுப்பதற்கான தகவல் முறை ஆகியவற்றுக்கான இரண்டு இணையப் பக்கங்களை த்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ட்ரோன்கள் மூலம் பதிவுசெய்யப்பட்ட அனைத்து பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்திய விவசாயத்தை வலுப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றும்,
வேளாண் துறைக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை மனதில் கொண்டு இந்த இரண்டு இணையப் பக்கங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக கூறினார்.
இவை டிஜிட்டல் வேளாண்மை மற்றும் வணிகத்தை எளிதாக்குதல் ஆகியவற்றிக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.