செய்திகள்
பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல் மந்திரி

உத்தரகாண்ட் - பேரிடர் பாதித்த பகுதிகளை வான்வழியே சென்று பார்வையிட்ட முதல் மந்திரி

Published On 2021-08-29 18:13 GMT   |   Update On 2021-08-29 18:13 GMT
உத்தரகாண்டில் பெய்த தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதேபோல் பல பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.

இதனால் வாகன போக்குவரத்து கடும் பாதிப்படைந்துள்ளது. நிலச்சரிவால் நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. 

இந்நிலையில், உத்தரகாண்டின் கார்வல் பிரிவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி வான்வழியே சென்று இன்று பார்வையிட்டார்.
Tags:    

Similar News