செய்திகள்
அசாமில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவு
அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் கோல்பாரா பகுதியை மையமாக கொண்டு 14 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். அசாமில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அண்டை மாநிலங்களான மேகாலயா, மேற்கு வங்காளத்திலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.