செய்திகள்
மங்களூருவில் இலங்கையைச் சேர்ந்த 38 பேர் கைது: சட்டவிரோதமாக தங்கியிருந்ததால் நடவடிக்கை
தமிழகத்தில் இருந்து மார்ச் மத்தியில் பெங்களூரு சென்று அங்கிருந்து மங்களூரு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மங்களூரு நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக, இலங்கையைச் சேர்ந்த 38 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மார்ச் மாதம் மத்தியில் தமிழகத்தில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர்.
அங்கிருந்து மங்களூருக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு உதவி செய்த 7 பேரை கைது செய்துள்ளோம் என போலீஸ் கமிஷனர் சசி குமார் தெரிவித்தார்.