செய்திகள்
கோப்புப்படம்

கர்நாடகாவை சுழற்றி அடிக்கும் கொரோனா: 50,112 பேர் பாதிப்பு- 346 பேர் உயிரிழப்பு

Published On 2021-05-05 14:17 GMT   |   Update On 2021-05-05 14:17 GMT
கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்இந்தியாவில் கர்நாடகம், கேரளா, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தி கடுமையான நடவடிக்கைகளை மூன்று மாநிலங்களும் எடுத்து வருகின்றன. இருந்தாலும் தொற்று கட்டுக்குள் வரவில்லை.

இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி, 50,112 ஆக பதிவாகியுள்ளது. மகாரஷ்டிராவிற்குப் பிறகு 50 ஆயிரத்தை தாண்டிய மாநிலமாக கர்நாடகா உள்ளது.

26,841 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 346 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 4,87,288 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 17,41,046 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News