செய்திகள்
டெல்லியில் கடும்பனி: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
டெல்லியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
வடக்கு இந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும், காலையில் வாகன ஓட்டுகளுக்கு எதிரே வரும் வாகனம் தெரியாக அளவிற்கு பனிமூட்டம் காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளில் வண்டிகளில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் கடுங்குளிரால் பொதுமக்களும் வெளியில் வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டெல்லியில் இன்று காலை 8.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது.