செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் கடந்த 3 நாட்களில் ரூ.9 கோடி உண்டியல் வசூல்

Published On 2020-12-29 09:33 GMT   |   Update On 2020-12-29 09:33 GMT
திருப்பதியில் கடந்த 3 நாட்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 30 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரூ.9 கோடியே 43 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 25-ந்தேதி முதல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வழக்கமாக 2 நாளைக்கு மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வந்த நிலையில் இம்முறை ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதன்படி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் வழியாக கடந்த 3 நாட்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 30 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 3 நாட்களில் ரூ.9 கோடியே 43 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News