செய்திகள்
கைது

இரட்டை குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலன் கைது

Published On 2020-09-23 07:19 GMT   |   Update On 2020-09-23 07:19 GMT
சித்தூர் மாவட்டம் புளிசெர்லா மண்டலத்தில் இரட்டை குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் புளிசெர்லா மண்டலம் ராமிரெட்டிகாரிப்பள்ளி பஞ்சாயத்து சிகுருமாகுலப் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த ஹேமஸ்ரீயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 15-ந் தேதி உதயகுமார் தன்னுடன் வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இதனால் ஹேமஸ்ரீ தன்னுடைய 10 மாத இரட்டைக் குழந்தைகளான புனர்விரெட்டி, புனித்ரெட்டி ஆகியோரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் உதயகுமாருடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 குழந்தைகளையும் சதம்மண்டலம் சிந்தபர்த்திவாரிபள்ளி அருகில் உள்ள தண்ணீர் குட்டையில் மூழ்கடித்து உதயகுமார் கொலை செய்தார். இதுகுறித்து அவர் ஹேமஸ்ரீயிடம் கூறினார். இதனால் ஹேமஸ்ரீ விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். மேலும் உதயகுமாரும் விஷம் குடித்தார். அப்பகுதியினர் அவர்களை மீட்டு புங்கனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சதுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் உதயகுமாரை புங்கனூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுசூதன் ரெட்டி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News