செய்திகள் (Tamil News)
கேரளாவில் மேலும் 3830 பேருக்கு கொரோனா
கேரளாவில் மேலும் 3,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் மேலும் 3,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,830 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் 14 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனாவில் இருந்து 84,608 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 32,709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் தெரிவித்துள்ளது.