செய்திகள்
மின்னல் தாக்கி பலி

பீகார் கனமழை - மின்னல் தாக்கியதில் 21 பேர் பரிதாப பலி

Published On 2020-07-04 16:36 GMT   |   Update On 2020-07-04 16:36 GMT
பீகாரில் கனமழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுக்கு 21 பேர் பலியாகினர்.
பாட்னா:

பீகார், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ் குமார் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
 
கடந்த வாரம் பீகாரில் இடி, மின்னல் தாக்கி 100க்கு மேற்பட்டோர் பலியானது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News