செய்திகள்
பொதுத் தேர்வு

ஆந்திராவிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

Published On 2020-06-20 12:28 GMT   |   Update On 2020-06-20 12:28 GMT
தெலுங்கானா, தமிழகத்தை தொடர்ந்து ஆந்திரா மாநிலத்திலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
அமராவதி:

சீனாவில் உருவான கொரோனாவைரசால் இந்தியா முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. முக்கிய நுழைவு தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளன.

இதற்கிடையே, தெலுங்கானாமற்றும்தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், ஆந்திரா மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம் என அம்மாநில கல்வித்துறை மந்திரி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News